திருமாற்பேறு - திருவிருத்தம்
‹ Thevaram4.109 1026 1027
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.
கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற் குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே. (*) இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.