திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
‹ Thevaram4.107 1013 1014 1015
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய் பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம் எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் மிறையவனே.
பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங் கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை பெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே.
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற் கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார்தடத்துத் தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற் காட்பட் டொழிந்தவன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே. (*) இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.