Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

11.05 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

சேக்கிழார்

4160

எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்

4161

தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ

4162

நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா நாதனை எம் பெருமானை ஞானம் ஆன ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப் பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல் உற்றேன்